பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை- Unforgetfulness-Ne pas s’oublier-531-540.
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 531
மிகுந்த உவகையால் மகிழ்ந்து இருக்கும்பொழுது மறதியால் வரும் சோர்வு, அளவு கடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமையானதாகும் .
எனதுகருத்து:
ஒருத்தன் எந்த நிலமையிலை இருந்தாலும் செய்யவேண்டிய வேலையளை மறக்காமல் அந்தந்த நேரத்திலை செய்யவேணும் . அப்படி மறந்தால் அதாலை வாற சேதாரங்கள் கூடவாய் இருக்கும் .
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control .
L'oabli de soi-même qui provient d'une trop grande joie est plus nuisible (au Roi) que la colère violente.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றுஆங்கு.532
நாள்தோறும் விடாமல் வரும் வறுமை, அறிவைக் கெடுப்பது போல , மறதி ஒருவனது புகழைக் கெடுத்து விடும் .
எனதுகருத்து:
ஒருத்தனுக்கு வாழ்க்கை முழுக்க ஏழையாய் இருந்தால் எப்பிடி பெரிய அளவிலை படிக்கேலாதோ , அப்பிடித்தான் அவன் மறந்து போற விசையங்களாலை அவனின்ரை புகழும் கெட்டு போகும் .
Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies!
Dé même que l'indigence excessive nuit à l'intelligence:
le faux sentiment de la sécurité tue la gloire.
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. 533
மறதி உடயவர்களுக்குப் புகழுடன் வாழும் தன்மை இல்லை . இது உலகத்தில் உள்ள எல்லா நூல்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும் .
எனதுகருத்து:
நீங்கள் என்னதான் பெரியகொம்பனாய்இருந்தாலும் இந்த அறணைகுணம் உங்களிட்டை இருந்தால் நீங்கள் சீறோ தான் .
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Ceux qui s'oublient n'obtiennent pas la gloire: telle est la conclusion non seulement de ceux qui ont traité de la morale mais aussi de tous les écrivains de l'univers.
அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ;ஆங்குஇல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. 534
உள்ளத்தில் அச்சம் உடையவர்களுக்குப் புறத்தில் அரண் இருந்தும் பயன் இல்லை . அதேபோல மறதி உடையவர்களுக்கு நல்லநிலை வாய்க்கப் பெற்றிருந்தும் பயன் இல்லை .
எனதுகருத்து:
மனசில பயம் இருக்கிறவைக்கு நீங்கள் என்னதான் பாதுகாப்பு குடுத்தாலும் அதாலை ஒருவேலையும் இல்லை . அதைமாதிரித்தான் இந்த அறணைக்குணம் பிடிச்ச ஆக்களுக்கும் .
To cowards is no fort's defence'; e'en so The self-oblivious men no blessing know.
La forteresse ne profite guère à ceux qui ont peur intérieurement, de même l'abandance des richesses ne protite pas aux Sans-soucci.
முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும். 535
துன்பம் வருவதற்கு முன்பு தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன் , பின்பு துன்பம் வரும்பொழுது தன் பிழையை நினைத்து வருந்துவான் .
எனதுகருத்து:
சிலபேரைப் பாத்தியள் எண்டால் ஆரம்பத்தில பிரச்சனையளை தீக்கிறவேலையளை விட்டுப்போட்டு , அதுமுத்தி வெடிச்சு தலைக்குமேலை போனாப்பிறகு செரியா ஃபீல் பண்ணுவினம் கண்டியளோ .
To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring.
L'insouciant qui ne se prémunit pas contre les malheurs,
déplorera sa négligence, une foie le désastre venu.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல். 536
மறதியில்லாத இயல்பு எவரிடத்திலும் , எக்காலத்திலும் பொருந்தியிருக்குமானால் , அதற்கு ஒப்பான நன்மை வேறு இல்லை .
எனதுகருத்து:
உங்களிட்டை இந்த அறணைக்குணம் இல்லையெண்டால் நீங்கள் முன்னுக்குவர கனக்க மினைக்கெடத் தேவையில்லை தானாகவே முன்னுக்கு வந்திடுவிங்கள் பாருங்கோ
Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gain.
D n'y a pas de bien pouvant égaler le non relâchement dans la vigilance, incessante en tout temps et contre tous les hommes.
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியான் போற்றிச் செயின். 537
மறவாமை என்னும் கருவி கொண்டு கடமைகளைச் சரிவரச் செய்து வந்தால் ,செய்வதற்கு அருமையானவையென்று கைவிடும் செயல்கள் எவையும் இல்லை .
எனதுகருத்து:
இதிலை என்னாலை பெரியளவு உங்களோடை ஒத்துவரேலாமல் இருக்கு ஐயன் . ஒருத்தன் என்ன திறமைசாலியாய் இருந்தாலும் அவன் செய்த நல்லது கெட்டதுகளை வைச்சுத்தான் அவனுக்கு பொறுத்தநேரங்களிலை ஞாபகம் வாறதும் மறந்து போறதும் . கர்ணன் எவ்வளவு பெரிய வீரன் கடைசி நேரத்தில அவன் பரசுராமர் முனிவரின்ரை சாபத்தாலை பிரம்மஸ்திரத்தை விடுகிற மந்திரம் மறந்துபோனதை எப்பிடி எடுக்கிறது ??
Though things are arduous deemed, there's nought may not be won, When work with mind's unslumbering energy and thought is done.
Rien d'impossible à celui qui agit avec prudence et sans s'oublier.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538
அறநூலார் புகழ்ந்து கூறிய செயல்களை விடாமல் செய்ய வேண்டும் .அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மையில்லை .
எனதுகருத்து:
இதென்ன கதை ஐயன் ?? பெரியாக்கள் சொல்லுற விசயங்கள் எல்லாம் சரி எண்டு சொல்ல ஏலாது . ஏன் , எப்பிடி , எதுக்கு எண்ட கேள்வியள் மனிசரிட்டை வந்ததாலைதான் நாங்கள் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறம் .
Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy.
Il faut faire les actes recommandés par les Sages. Sinon on n'aura pas de bonheur dans ses sept naissances.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக ; தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துஉறும் போழ்து. 539
மகிழ்ச்சியில் கர்வம் கொள்கின்றபொழுது அம்மகிழ்ச்சியினால் கடமை மறந்து அழிந்தவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும் .
எனதுகருத்து:
அப்பிடி ஒரு மனநிலமை இருந்தால் ஏன்ஐயன் உலகத்திலை இவ்வளவு பிரச்சனையள் ?? அதிகாரமும் பதவியும் சும்மா கிடக்கிறவனையும் கொம்பு சீவிவிடும் . நாட்டை முன்னேத்தாமல் , தன்ரை நாட்டு மக்களையே போரிலை வெண்டு போட்டன் எண்டு சொல்லுற மகிந்தா இதுக்கு நல்ல உதாரணம் கண்டியளோ ....
Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought.
Lorsqu'on s'oublie dans une trop grande joie, qu'on se rappelle ceux que leur insouciance a perdus.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். 540
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி சோர்வில்லாமல் இருக்கப்பெற்றால் , அவன் நினைத்ததை அடைதல் எளிதாகும்.
எனதுகருத்து:
நீங்கள் சொல்லிறது சரியெண்டாலும் , இண்டையான் நிலமையிலை சிலபேரை பாத்தியள் எண்டால் அவையின்ரை கதையள் கூடவாய் இருக்கும் .ஆனால் செய்கையளை தேடித்தான் பிடிக்கவேணும் . இவையள் தரவளியை நம்பிற கூட்டங்கள்தான் கூடவாய்க் கிடக்கு .
'T'is easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain.
Il est aisé d'obtenir ce que l'on a désiré, si l'on a constamment présent à la mémoire l'objet désiré.
Comments
Post a Comment