பொருட்பால் - அரசியல் - தெரிந்து தெளிதல்-Selection and Confidence- S’éclairer après expérimentation -501 -510.
பொருட்பால்-அரசியல்-தெரிந்து தெளிதல்-Selection and Confidence-S’éclairer après expérimentation-501-510.
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும். 501
ஒருவனை அறம் , பொருள் , இன்பம் , உயிர் பொருட்டால் அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையிலும் ஆராய்ந்து தக்கவனாயின் அவனை நம்புதல் வேண்டும் .
எனது கருத்து:
இந்தக்குறளை படிக்கேக்கை எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது . அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் இந்த நாலையும் வெண்ட ஒரு படையணி எங்களிட்டை இருந்தது . உலகத்தையே திரும்பி பாக்க வைச்சம் . ஏன் நாங்கள் தோத்துபோனம் ??? எனக்கு இண்டுமட்டும் விழங்கேலை !!!!!!!!
How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make.
Que celui qui a satisfait aux quatre épreuves suivantes: l'amour de la vertu, l'or. la luxure et la crainte pour la vie, soit choisi (par le Roi).
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் சுட்டே தெளிவு. 502
நல்ல குடியில் பிறந்து , குற்றங்களில் இருந்து நீங்கிப் பழிச்செயலைச் செய்ய அஞ்சி நாணுகின்றவனையே நம்பி வேலையைக் கொடுக்கலாம் .
எனது கருத்து:
இந்தக்காலத்திலை இப்பிடி ஒருத்தரையும் நான் காணேலை . பதவிக்கு தெரிவு செய்யிறதே நல்ல முசுப்பாத்தியாய் போச்சு . பந்தம் பிடிக்கிறவையும் சிங்சக் அடிக்கிறவையும் தான் இண்டைக்கு பதவியளிலை இருக்கினம் கண்டியளோ .
Of noble race, of faultless worth, of generous pride That shrinks from shame or stain; in him may king confide.
Que le choix s'arrête sur celui qui sst de bonne naissance, dégagé de vices, plein de retenue et qui craint le déshonneur.
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இண்மை அரிதே வெளிறு. 503
அறிவுக்குரிய நூல்கள் பலவற்றைப் படித்துக் குற்றங்கள் இல்லாமல் இருப்பவரிடத்திலும் ஆராய்ந்து பார்த்தால் சில அறியாமைகள் இருக்கும்
எனது கருத்து:
இதை இப்படியும் சொல்லலாம் " படிச்ச கோமாளியள் " எண்டு . சிலபேரைபாத்தியள் எண்டால் பெரியபட்டங்களெல்லாம் பின்னாலை கொழுவி , எந்தநேரமும் தங்களைபற்றி கதைக்காட்டிக்கு அவைக்கு திண்ட சாப்பாடு செமிக்காது . ஆனால் அவையின்ரை நடவடிக்கையளை வடிவாய் பாத்தியள் எண்டால் , எலிமெண்டறி பிள்ளையள் அளவுக்கு படு கேவலமாய் இருக்கும் .
Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, When closely scanned, a man from all unwisdom free.
Même parmi ceux qui ont une rare instruction, et qui sont dégagés de tous les défauts, (ci dessus spécifiés), il est rare de ne pas trouver de sots, si l'on se livre à un examen minutieux.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504
ஒருவருடைய குணம் குற்றம் ஆகிய இரண்டையும் ஆராய்ந்து , அவற்றுள் மிக்கது எதுவோ அதனால் அவரை நல்லவர் என்றோ தீயவர் என்றோ கொள்ள வேண்டும்.
எனது கருத்து:
இப்படியான ஆக்கள் இந்தக்காலத்திலை இல்லை எண்டே சொல்லலாம் கண்டியளோ . ஒருத்தன் கொஞ்சத் நல்லாய் பிரதிபலிக்கமாய் இருக்கிறது எங்கடையாக்களுக்கு ஒத்து வராது பாருங்கோ . ஒருத்தன் கொஞ்சம் சறுக்கினால் காணும் அவன்ரை நல்ல பக்கத்தை விட்டுட்டு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அவனை ஒருவழி பண்ணி போடுவங்கள் எங்கடையாக்கள் . இதாலை நல்லவன் நல்லது செய்ய யோசிப்பான் . அதாலை இந்தக் குறள் இப்ப உள்ள நிலமையிலை சரிப்பட்டவராது எண்டுதான் நான் நினைக்கிறன் .
Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man.
Peser les qualités et les défauts d'un homme Choisir d'après ce qui l'emporte.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 505
ஒருவருடைய பெருமையை அறிவதற்கும் சிறுமையை அறிவதற்கும் அவர் செய்யும் செயலே தக்க உரைகல்லாகும்.
எனது கருத்து:
இதிலை ஐயன் சொல்லவாறதிலை எனக்கு உடன்பாடில்லை பாருங்கோ . ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ எண்டு அறியிறது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் , அவனை மற்றவை பாக்கிற கண்ணோட்டத்தை பொறுத்தே ஒழிய ,தனிய செயலை மட்டும் தான் இல்லை பாருங்கோ . தனிய செயலை மட்டும் தான் பாக்கிறதெண்டால் சேணங் கட்டின குதிரையாய் தான் இருக்கேலும் .
Of greatness and of meanness too,The deeds of each are touchstone true.
Ce sont les propres actes d'un homme qui sont la pierre de touche de sa bonne et de sa mauvaise réputation.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி.506
சுற்றம் இல்லாதவரை அரசன் நம்பித் தெளியக்கூடாது. அவர் உலகில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு அஞ்சமாட்டார் .
எனது கருத்து:
இந்தக் குறளை பாக்கிற நேரம் எனக்கு தமிழகத்திலை இப்ப இருக்கிற அரசியல் நிலமையள்தான் ஞாபகம் வருகிது . ஒரு கட்சியிலை இந்தக் குறளுக்கு கருத்துரை எழுதின முக , தலைவர் . மற்றப்பக்கம் உறவுகள் சுற்றங்கள் அற்ற ஜெ தலைவி . இதிலை யாருடைய செயல்களால் தமிழகம் நிமிர்ந்தது ???? ஒருசெயலை செய்வதற்கு எப்பவுமே சுற்றம் உறவுகள் தடையாகத் தான் இருக்கும் எண்டு நினைக்கிறன் . அதோடை பழிக்கு அஞ்சினால் எப்படி ஒரு செயலை செய்யிறது ????
Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin.
Renoncer à choisir ceux qui n'ont pas de parents: ils n'ont aucune attache avec le monde, donc ils ne craignent pas le déshonneur.
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.507
அன்புடமை ஒன்றையே பற்றுக் கோடாக கொண்டு அறியவேண்டுவனவற்றை அறியாதாரை நம்புதல் அரசனுக்குத் துன்பத்தையே விளைவிக்கும் .
எனது கருத்து:
இதுக்கு என்னத்தைச் சொல்ல . ஒரு பதவியை எடுக்கிறதுக்கு எவை திறமை அடிப்படையிலை வருகினம் ??? எல்லாம் காசுகளை பின்னாலை தள்ளியும் , றெக்கமண்டேசனுகளாலையும் தானே வருகினம் பாருங்கோ . அப்பிடி பதவிக்கு வாறவையளாலை பதவிக்கு பெருமை இல்லை கண்டியளோ , அவமானம் தான் மிச்சம் .
By fond affection led who trusts in men of unwise soul,Yields all his being up to folly's blind control.
Choisir ceux qui ne savent pas ce qu'il faut savoir, uniquement à cause de l'affection qu'il a pour eux, conduit ( le Roi ) à faire toutes les sottises
தேராண் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 508
தான் அறியாத ஒருவனை ஆராய்ந்து பாராமல் நம்பிய அரசனுக்கு அத்தெளிவு பின்வரும் தலைமுறையிலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்
எனது கருத்து:
இது எல்லாம் இப்பசரிவராது ஐயன் . கேடுகெட் ட காசும் காலமும் சேர்ரந்தால் ஒரு கோமாளியை கூட பதவியிலை வைக்கலாம் . உங்கடை காலத்திலை சனங்கள் நல்லதுகளாய் இருக்கலாம் ஆனால் இப்ப அப்பிடியில்லை . சனங்கள் இப்படியான கோமாளியளின்ரை துன்பங்களுக்கு பழகிப் போயிட்டுதுகள்
Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race.
Le choix de quelqu'un qui est étranger à soi sous tous les rapports, crée même à la postérité des maux irréparables.
தேறற்க யாரையும் ; தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 509
அரசன் எவரையும் ஆராய்ந்து பாராமல் தெளிதல் கூடாது .ஆராய்ந்து தெளிந்த பின்னர் அவர்பால் ஒப்படைக்கும் பணிகளை நம்பித் தெளிதல் வேண்டும் .
எனது கருத்து:
எப்பவும் வெளுத்ததெல்லாம் பால் எண்டு இருக்காமல் நாலுவளத்தாலையும் யோசிச்சு ஒருத்தரை வேலைக்கு எடுக்கவேணும் எண்டும் , பேந்து அவையிலை ஐமிச்சப்படக்கூடாது எண்டும் சொல்லுறியள் . நல்லவிசையம்தான் . ஆனால் ஐயன் இப்ப நம்பினவனுகே ஆப்படிக்கிற காலம் கண்டியளோ . என்னதான் இருந்தாலும் ஒரு கண் எப்பவும் முழிப்பாய் இருக்கவேணும் பாருங்கோ .
Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide
Né jamais choisir avant d'avoir éprouvé. Ne choisir que celui qui a satisfait à l'épreuve.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 510
ஒருவனை ஆராயாமல் நம்புதலும் , ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனிடம் சந்தேகப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் .
எனது கருத்து:
என்னைபொறுத்தவரையிலை ஒருத்தரை என்னதான் ஆராய்ஞ்சு பதவிக்கு எடுத்தாலும் , அவருக்குமேலை அவருக்குத் தெரியாமல் ஒருகண் இருக்கத்தான் வேணும் பாருங்கோ .இல்லாட்டில் நாங்கள் இருக்கமாட்டம் .
Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can heal.
Choisir sans épreuve préalable et suspecter celui qui a été choisi, après épreuve : tous les deux conduisent à des malheurs irréparables.
Comments
Post a Comment